பதிவு விலக்கம் குறித்த அறிவிப்பு
December 6, 2006 – 12:49 am by தமிழ்மணம்விடாது கறுப்பு பதிவு அதன் அண்மைக்கால உள்ளடக்கம், பின்னூட்டங்கள் ஆகியவை தமிழ்மணத்தின் விதிகளுக்கு மீறியதாக இருப்பதால், உடனடியாகத் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்படுகின்றது. தமிழ்மணத்தின் விதிகளைப் பின்பற்றும்படி கேட்டுக்கொண்ட தொடர்ச்சியான அஞ்சல்களுக்கும் இடுகைகளின் விலக்கத்துக்கும் விடாது கறுப்பு பதிவினதும் உள்ளடக்கங்களினதும் தொனி மாறாததால், இவ்வாறான நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்குத் தமிழ்மணம் தள்ளப்பட்டிருக்கின்றது.
ஏற்கனவே தனிப்பட்டவர்களினைத் தொடர்ந்து தாக்கியதால் ராபிஹுட் பதிவு, ராதா ராகவன் பதிவு என்பன நீக்கப்பட்டிருப்பதைப் பதிவர்கள் அறிவீர்கள். இதைத் தவிரவும் தனிப்பட்ட தாக்குதல்கள் உள்ளடக்கிய இடுகைகளைக் கொண்ட பதிவுகள் அவை தொடர்ந்தும் தமிழ்மணத்திலே இருக்கவேண்டிய தேவை இருப்பின், அவற்றினை விலக்கும்படி அன்புடன் கேட்கப்பட்டிருக்கின்றன.
தமிழ்மணம் தன்னைப் பற்றிய ஆதாரமற்ற அநாமதேயத்தாக்குதல்களையும் மறைமுகமான மிரட்டல்களையும் தமிழ்மணம் பதிவர்கள் தமிழ்மணத்தின் நோக்கங்களையும் இதுவரைகாலத்துச் செயற்பாடுகளையும் நன்றே அறிந்திருக்கின்றார்கள் என்ற முழு நம்பிக்கையிலே இன்னமும் திரட்டிக் கொண்டிருக்கின்றது. தமிழ்மணம் ஒரு தானியங்கித்திரட்டி என்ற நிலையிலே ஒவ்வொரு பதிவினையும் இப்போதிருக்கும் தொழில்நுட்ப அமைப்பின்படி, உள்ளடக்கங்களைப் பார்த்து சேர்த்தோ விலக்கியோ கொள்ளும் தகமையுடைத்ததல்ல. இதைப் புரிந்து கொண்டு, தனிப்பட்ட பதிவர்களின் செயற்பாடுகளுக்குத் தமிழ்மணம் எவ்வகையிலும் பொறுப்பேற்றமுடியாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். தமிழ்மணம் ஒரு பதிவரின் இடுகை தனிப்பட்டவளவிலே தாக்குதலை நிகழ்த்துதெனக் காண்கையிலே அதற்கான அவரின் செயல் விளக்கத்துக்கும் இடுகை விலக்குதலும் இடமளித்த பின்னரே அப்பதிவு குறித்துச் செயற்படமுடியும். எந்நிலையிலும் தமிழ்மணத்தின் நடவடிக்கைகள் தமிழ்மணத்தின் விதிகளுக்கு அமைய மட்டுமே எடுக்கப்படுகின்றவையாகும். தமிழ்மணத்தின் விதிகளுக்கு முரணானவை எனத் தமிழ்மணத்துக்குத் தோன்றும்படி முறையீடிடப்பட்ட மற்றைய இடுகைகள், பதிவுகள் குறித்த பட்டியலையும் விபரமான பதிவினையும் விரைவிலே இங்கே ‘தமிழ்மணம் அறிவிப்பு’ பதிவிலே காணலாம். இப்பதிவுகளிலே சில ஏற்கனவே இடுகைகளையோ பின்னூட்டங்களையோ விலக்கிக்கொள்ளும்படி கேட்கப்பட்டிருக்கின்றன.
முன்னைய ‘தமிழ்மணம் அறிவிப்பு’ பதிவு ஒன்றிலே குறிப்பிட்டதுபோல, விரைவிலே இது குறித்து பதிவர்கள் வெளிப்படையாகவே பதிவொன்றிலே முறையிட வழிவகை செய்யப்படும். இது தமிழ்மணத்தின் செயற்பாடுகளிலே தமிழ்மணத்திற்கு அநாவசியமான அநாமதேயர்களின் திட்டமிட்ட தாக்குதல்கள் பதிவர்களைக் குழப்பாதிருக்கவும் பயமுறுத்தாதிருக்கவும் உதவுமெனத் தமிழ்மணம் நம்புகிறது. இதன் மூலம் பதிவுகள் குறித்து முறையீடிடும் பதிவர்களும் தமது செயற்பாடுகளுக்கு ஓரளவுக்கு தார்மீகப்பொறுப்பு ஏற்கவேண்டிய நியாயம் உருவாகும். பழுத்த மரத்துக்கும் கல்லடி அதனை உயிரிழக்கும் எல்லை வரைக்கும் இருக்கக்கூடாதென நம்பும் தமிழ்மணம் தன்னிலே பதிவு செய்துகொண்ட பதிவர்களும் உணர்ந்துகொள்ளவேண்டுமென விரும்புகின்றது.
பதிவர்கள் தமிழ்மணத்தின் நிலையினையும் விதிகளையும் புரிந்துகொள்வீர்களெனத் தொடர்ந்தும் தமிழ்மணம் நம்புகிறது.
தமிழ்மணத்தின் பதிவுகள் விலக்கப்படுவது குறித்த பழைய பதிவுகள்:
ஒவ்வாத பதிவுகளை நீக்குதல் (தொடர்ச்சி)
நன்றி.
119 Responses to “பதிவு விலக்கம் குறித்த அறிவிப்பு”
இன்று காலைதான் நினைத்தேன் தங்களுக்கு இந்த பதிவுகளின், அது தொடர்ந்த மறைமுக தாக்குதல்களை பட்டியலிட வேண்டுமென்று….தாங்களே இது தொடர்பாக இந்த பதிவு வெளியிட்டு தங்களது நிலையை விளக்கியதற்க்கு நன்றி.
By அனானி on Dec 6, 2006
//பதிவர்கள் தமிழ்மணத்தின் நிலையினையும் விதிகளையும் புரிந்துகொள்வீர்களெனத் தொடர்ந்தும் தமிழ்மணம் நம்புகிறது.//
ஹரிஹரன்களை விட கருப்புவின் செயல்களில் குற்றம் காண்பது எவ்வகையில் நியாயம் என்று புரியவில்லை. அவரை பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாயவரத்தான்களை பற்றி கணக்கில் எடுத்தீர்களா என்றும் புரியவில்லை. அதன் பிந்தான் தோழர் கருப்புவின் தொனி மாறியதை அறிவோம்.
அனைத்து விதிகளும், சட்டங்களும் அதிகாரங்களால் மட்டுமே கட்டபட்டவை என்று தெரிந்தபோதும் முடிவை பரிசிலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“வரவனையான்” செந்தில்
By செந்தில் on Dec 6, 2006
இத்தகைய நடவடிக்கை தேவைதான். ஒரு ஆரோக்கியமான சுழலை உருவாக்குவதில் நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி தரும் என்று நம்புகிறேன்..
By டிபிஆர். ஜோசஃப் on Dec 6, 2006
மிக்க நன்றி தமிழ்மண நிர்வாகத்துக்கு. இந்த நடவடிக்கையை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்.
I am sure all right thinking persons will agree with me.
நன்றி,
டோண்டு ராகவன்
By டோண்டு ராகவன் on Dec 6, 2006
This is not fair. Please reconsider this.
By Pakutharivu on Dec 6, 2006
சரியான நடவடிக்கை.
அது யாராக இருந்தாலும்.
நன்றி தமிழ்மண நிர்வாகிகளே.
By kumar on Dec 6, 2006
தமிழ் மணத்தின் நடுநிலை மனம் இந்த நடவடிக்கை மூலம் நிலைப்படுத்தப் படுகிறது!
By hariharan on Dec 6, 2006
வரவனையானே நீக்கப்பட வேண்டியவர்தான்….பார்த்தீர்களா அவரது சமிபத்திய பதிவினை….உணர்ச்சிபூர்வமான எழுதுவதாக நினைத்து அடுத்தவர்களை அடித்து நொறுக்கும் இவரது வாதத்தினை இங்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது எனது கோரிக்கை.
By அனானி on Dec 6, 2006
Romba nandri. Karuppu veluppu ena nirapetham kaati pesu nandri ulla jeevankalakku saatai adi. (nandri ulla jeevan ethu endru anaivarakkum theriyum)
By Ramamurthy on Dec 6, 2006
யாராக இருந்தாலும், ஜாதி, மத, இன உணர்வுகளைப் பற்றி எழுதும் போது நெஞ்சில் ஈரத்துடனும், கவனத்துடனும் எழுத வேண்டும்.
தங்கள் கருத்துகளை எழுதலாம். ஆனால் அது யாரையும் காயப்படுத்தும்படி எழுதக்கூடாது.
பதிலுக்குப் பதில் தீர்வாகாது. எதிர் பதிவு போடுபவர்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தமிழ்மணத்தில் எழுதுபவர்களில், படிப்பவர்களில் என்னைப்போல நான்கைந்து பேர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருமே இளைஞர்கள்தான்.
எழுதுபவர்களின் சராசரி வயது 33ற்கு மேல் தேறாது!
ஆகவே அவர்கள் தங்களுக்குரிய கோபத்தையும், தாகத்தையும், வேகத்தையும் தவிர்த்து கண்ணியமாக எழுத வேண்டுமென, அடியேனும் ஒரு பதிவாளர் என்ற முறையில் கேட்டுக் கொள்கிறேன்.
தற்சமயம் வேகத்துடன் எழுதும் வேறு சில பதிவாளர்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
விடாது கருப்பு நன்றாக எழுதக்கூடிய ஆற்றல் உள்ளவர்.
அவர் கையாண்ட நடையும், வார்த்தைப் பிரயோகங்களும், தனி மனிதத்தாக்குதல்களும்தான் சரியல்ல; முறையல்ல
அதுவே அவரை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக் கிறது.
By SP.VR.SUBBIAH on Dec 6, 2006
‘வரவனை’ செந்திலின் கருத்தையே வழிமொழிகிறேன்.
ஒரு தலைப்பட்சமான முடிவென்று தோன்றுகிறது. மறுபரிசிலனை செய்ய வேண்டுகிறேன்.
By யெஸ்.பாலபாரதி on Dec 6, 2006
இது சரியான நடவடிக்கை என நீங்கள் வாதிடுவீர்கள் எனில், இதைவிட பச்சையான மொழியில் இந்தியச் சமூக புரட்சியாளரான பெரியார் அவர்களைப் பற்றி பதிந்தவர் இன்னும் தமிழ்மணத்தில் உலவுகிறாரே!!!! அதுவும் நாளுக்கு நாள் மிகக் கேவலமான பதிவுகளுடன்.
விடாது கருப்புவை காட்டிலும் பல மடங்கு அதிகமான தனி மனித தாக்குதல்கள் மேற்கொள்ளும் பதிவர்கள் அண்மைக்காலமாக மலிந்து போய் இருக்கின்றனரே!!! அவர்களுக்கு உங்களின் கத்தரிக்கோல் வேலை செய்யாதோ???
விடாது கருப்புவின் பாணி மிகவும் மாறியது எதற்குப் பின்னர் என்பது ஊறறிந்த ரகசியம் ஆயிற்றே. தங்களுக்கு தெரியாதா???
உங்களை உறுத்தியது அவரின் மொழி என்றால், ஒடுக்கப்பட்டவர்கள் கேலிச் சீண்டலுக்கு ஆளாகும் போது அவர்களிடமிருந்து எங்ஙணம் நாகரீக வார்த்தைகளை எதிர்பார்க்கிறீர்கள்???
தங்கள் ஒருதலையான நடவடிக்கைக்கு எதிராக என்னுடைய வன்மையான கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
By சபாபதி சரவணன் on Dec 6, 2006
அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்பட்டத் தவறான முடிவு.
கருப்புவின் பதிவில் ஒரு சில பதிவர்களின் பெயர்கள் இருந்ததை ஒப்புக்கொள்கிறேன். அப்படிப்பார்த்தால் விடாது கருப்புதான் போலி டோண்டு என்று வெளிப்படையாக மாயவரத்தான் எழுதியது தனிமனிதத் தாக்குதல் இல்லையா? இரண்டுமே தவறுதான்.
By வழிப்போக்கன் on Dec 6, 2006
தமிழ்மணம் நிர்வாகத்தினரே,
தனிப்பட்ட ஒரு பதிவரைத் தாக்கி வந்த பதிவுகளை நீங்கள் திரட்ட ஆரம்பித்ததில் இருந்து பிடித்தது உங்களுக்கு சனி.
அப்போதே நாங்கள் பலமுறை உங்களுக்கு சுட்டிக் காட்டினோம். ஆனால் நீங்கள் செவிசாய்க்கவில்லை.
இலங்கையர்கள் நடத்துவது போன்ற ஒரு தொனியை மக்கள் முன் காட்டுவதற்காக இலங்கைப் பாணி நடையுடன் பதிவுகளும் அறிவிப்பும் இட்டீர்கள்.
இந்த அறிவிப்புகளை இடுவதும் தமிழ்மணத்தினை தொடர்ந்து யார் நடத்துவது என்றும் எனக்கு தெரியும்.
கால்கரி சிவாவும், ஹரிஹரனும், டோண்டு ராகவனும் , மாயவரத்தான் ரமேஷ்குமாரும், கிருஷ்ணாவும், ம்யூசும், மவுல்சும், ஜடாயுவும், அரவிந்தன் நீலகண்டனும், மலர் மன்னனும், நேசகுமாரும், வடுவூர் குமாரும், செளராஸ்டிர குமரனும், டாலர் செல்வனும், வஜ்ரா சங்கரும் திராவிடர்களைத் திட்டி அன்றாடம் பதிவுகள் போடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?
ஒரு வழக்கு என்று வந்தால் நன்கு தீர விசாரித்து பதிவுகளை அகற்ற வேண்டும். ஆனால் எனக்கு நீங்கள் எந்த கடிதமும் இடவில்லை. எந்த விளக்கமும் கேட்கவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் என் பதிவினை நீக்கியது கண்டனத்துக்கு உரியது.
இதற்கான விலையை நீங்கள் கொடுத்தே ஆகவேண்டும். திராவிடர்களின் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
பெரியார் புகழ் வாங்க!
=================
பதிவர் விடாது கறுப்பு:
கீழுள்ளவை தொடர்ச்சியாக உங்களுக்கு அனுப்பப்பட்ட அஞ்சல்கள். [இதுபோல, செர்வாண்டிஸ் போன்றவர்களுக்கும் அவர்களின் பதிவுகளிலிருக்கும் பின்னூட்டங்களுக்காகக் குறிப்பு அனுப்பப்பட்டு, அவை விலக்கப்பட்டன; மேலே குறிப்பிட்டதுபோல, விலக்கப்படும் சாத்தியங்களுடன் அவதானிப்பிலேயிருக்கும் மற்றைய பதிவுகள், இடுகைகள் பட்டியல் விரைவிலே இங்கே இடப்படும்]:
to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Dec 5, 2006 11:51 PM subject Your post செளராஸ்டிர removed in http://www.thamizmanam.com mailed-by srs.perfora.net
Dear author,
Your post செளராஸ்டிரis removed by http://www.thamizmanam.com Administrator due to follwing reason,
பதிவர் விடாது கறுப்பு: உங்களின் இடுகைகள் தொடர்ந்து தமிழ்மணத்தின் எல்லையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றன. உங்களின் தமிழ்மணம் மீதான அக்கறைக்குத் தமிழ்மணம் நன்றி தெரிவிக்கும் அதேவேளையிலே, பதிவர்கள் மீதான தனிப்பட்ட உங்கள் பதிவின் இடுகை, பின்னூட்டங்கள் தரும் தாக்குதல்களைத் தொடர்ந்தும் தமிழ்மணம் அனுமதிக்கமுடியாத நிலையை எட்டிக்கொண்டிருக்கின்றது. இந்நிலை தொடரின், உங்கள் பதிவு விலத்தப்படவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படும் என்பதை வருத்தத்துடன் தமிழ்மணம் தெரிவிக்கின்றது. தமிழ்மணத்தின் நிலையினையும் விதிகளையும் புரிந்துகொள்வீர்களென நம்புகிறது.
நிர்வாகி
http://www.thamizmanam.com
——
to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Dec 3, 2006 10:32 PM subject Your post தமிழ்மணத்தினை removed in http://www.thamizmanam.com mailed-by srs.perfora.net
Dear author,
Your post தமிழ்மணத்தினைis removed by http://www.thamizmanam.com Administrator due to follwing reason,
Blogger vidaathu kaRuppu, While thamizmaNam appreciate your care for thamizmaNam, it can NOT allow your post distort the view of thamizmaNam for a wide readership. It only hurts thamizmaNam. Hence, it is unfortune for thamizmaNam to remove your particular post from aggregation Thank you for continuing support.
நிர்வாகி
http://www.thamizmanam.com
——
to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Nov 28, 2006 12:26 AM subject Your post Email removed in http://www.thamizmanam.com mailed-by srs.perfora.net
Dear author,
Your post Emailis removed by http://www.thamizmanam.com Administrator due to follwing reason,
Though the main post is not of thamizmanma\’s concern, thamizmaNam is unconfortable with few comments in this posr. thamizmaNam kindly requested to remove few feedback to keep this post aggregating. However it has not been done, and th e-mail got bounced. Hence thamizmaNam regrets to inform you that this post is removed from thamizmaNam aggregation. thamizmaNam hopes you would understand its position. Thank you very much.
நிர்வாகி
http://www.thamizmanam.com
—–
to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Nov 5, 2006 9:04 PM subject Your post பல removed in thamizmanam.com mailed-by srs.perfora.net
Dear author,
Your post பலis removed by thamizmanam.com Administrator due to follwing reason,
Dear Blogger Due to the direct attack on a blogger, unfortunately thamizhmaNam has to remove this particular post from its aggregation. ThamizhmaNam hope you would understand its position. ThamizhmaNam appreciate your continuing coorporation with understanding. Thank you very much.
நிர்வாகி
http://www.thamizmanam.com
—-
to blackboy_24@yahoo.com.sg cc postadmin@thamizmanam.com date Oct 31, 2006 9:52 PM subject Your post பாப்பாத்தியின் removed in thamizmanam.com mailed-by srs.perfora.net
Dear author,
Your post பாப்பாத்தியின்is removed by thamizmanam.com Administrator due to follwing reason,
தமிழ்மணத்துக்குப் பாதகமான விளைவினைத் தரக்கூடிய தலைப்புக்காகவும் உள்ளடங்கிய சில பதங்களுக்காகவும் இந்த இடுகையைத் திரட்டியிலிருந்து தமிழ்மணம் நீக்குகிறது. புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
நிர்வாகி
http://www.thamizmanam.com
—-
By விடாது கருப்பு on Dec 6, 2006
வேறு பெயரில் சம்பந்தப் பட்ட நபர் திரும்பி வந்தால் தமிழ்மணம் என்ன செய்யும் ?
By Vajra on Dec 6, 2006
தீண்டாமை ஒரு பாவச்செயல் என்பது தெரிந்து தீண்டாமைக்கு கொடிதாங்கி ஒரு உயர்ஜாதிகாரன் எழுதிய இந்த பதிவுக்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறீர்கள் தமிழ்மணத்தாரே!
http://harimakesh.blogspot.com/2006/11/65.html
By திராவிடவெறியன் on Dec 6, 2006
That is too good decision from your side. Keep it up. Many of the skilled people are keeping away from writing in blogs and posting in thamizmanam just because of people like karuppu. It is good for tamil blogspace. Whatever may be the case, please do not add his blog in Thamilmanam in near future too. By the way, I am not a brahmin and my support for your action is just based on the thoughts good for tamil cyberworld.
By towardslight on Dec 6, 2006
கருப்பு வின் பதிவு கொஞ்சம் சூடாக இருந்தது உண்மை தான். ஆனால் இங்கு இன்னும் பலர் எல்லோருடைய தன்மானத்தையும் குறி வைத்து எழுதுகிறார்களே. குறிப்பாக ஹரிஹரனின் பதிவுகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக இல்லை.மறைமுகமாக ஜாதியம் பேசும் இது போன்றவர்களின் பதிவுகளை ஏன் தடை செய்யக்கூடாது
By Sreesharan on Dec 6, 2006
நிர்வாகி அவர்களே
பொருக்க முடியாத அளவிற்க்கு
ஆபாசாமாகவும் தனி நபர் தாக்குதலாகவும் இருக்கும் பதிவுகளை தாங்கள் திரட்டும் போது கருப்புவை மட்டும் நீக்கியது ஆச்சரியமே
நீங்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் ஒருவன் உன்னை அடிக்கும் போது கைகட்டி சும்மா இரு என்ப்பது போல் உள்ளது.
சிலர் எம்பெருமானார் நபிகளையும் பெரியாரையும் மட்டரகமாக தாக்கி எழுதும் பதிவுகளை தாங்கள் பார்க்கவில்லையா?
இது பரிசீலனை பன்ன முடியாத தீர்ப்பா?
நண்றி
இறையடியான்
By இறையடியான் on Dec 6, 2006
அனானியாக கருத்து சொல்ல காரணம் இருக்கிறது. ஏற்கனவே இந்த பதிவ்லும் பின்னோட்டத்தில் போலிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் என் உண்மையான முகம் காட்டி எழுதினால் உடன் எனக்கு போலி பிளாக் கிடைக்க பெறலாம்.
தமிழ் மணம் நிர்வாகம் தாங்கள் எடுத்த முடிவு சரியானது. இதில் இருந்த்து பின் வாங்க வேண்டாம்.
தமிழ் வலை பதிவுகளில் குழு மனபபான்மையும் சாதி தாக்குதலும் தான் அதிகமாக காண படுகிறது.
இதை நீக்கி சரியான தளத்தில் செல்ல இந்த முயர்சி வழி வகுக்கும். நீங்கள் நீக்கிய கருப்பு ஒரு பிரிவினரை திட்டுவதை தவிர வேறு ஏதும் எழுதினாரா என்று சொல்லவதர்க்கு இல்லை.
இதோ அவரின் பின்னோட்டத்தில் கூட எந்த வித வம்புக்கு போகாமல் எழுதி கொண்டு இருக்கும் வடுவூர் குமார் போன்றவர்களை தாக்கும் போது இவரின் எண்ணம் தெரிகிறது.
இந்த சுய தணிக்கை தொடருட்டும். அந்த பக்கதில் இருந்த்தும் சில பதிவுகளை நீக்குங்கள்.
தமிழ் மணம் வளர, தமிழ் வலைபூக்கள் வளர்சி பெற நீங்கள் எடுத்த நடவடிக்கை சரியானது.. வாழ்த்துக்கள்
By அனானி on Dec 6, 2006
பிறர் மனங்களை புண்படுத்தும் பதிவுகளைத் தடைசெய்வது என்பது வரவேற்கத்தக்கது.
அதே சமயம் இந்த அளவுகோல் தயவு தாட்சண்யமின்றி பாராபட்சமில்லாமல் எல்லாப் பதிவர்களுக்கும் அது பொருந்துவதாக உங்கள் நடவடிக்கை இருக்குமேயானால்.. மிக்க மகிழ்ச்சி. அதிலிருந்து பிறழ்வதாக சகப் பதிவர்களுக்குத் தோன்றுமேயானால் தாங்கள் நடுநிலையிலிருந்து வழுவி கருப்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதியாகத் தான் தெரியும்.
இடுகின்ற அனைத்துப் பதிவுகளையும் தணிக்கை செய்வது சாத்தியமில்லை என்றாலும்.. புகார்கள் வரும்போது கவனித்து ஆவண செய்வீர்கள் என்று நம்புகிறேன். இந்த வகையில் இன்னும் நிறையப் பதிவர்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்ட இரு மதத்தினரிடையே மிக கேவலமாக ஒருவரையொருவர் அபாண்டமாக பழிசுமத்தி வரும் பதிவுகள் இதற்கு ஒரு சரியான உதாரணம்.
By திருவடியான் on Dec 6, 2006
அன்புடையீர்,
தமிழ்மண நிர்வாகிகள் என்கிற முறையில் திரு.விடாது கருப்பு அவர்களின் மீதான, உங்களின் நீக்க நடவடிக்கையை ஒருதலைப் பட்சமானது என்றே கருதுகிறேன்.
அவரை இவ்வாறு எழுதத் தூண்டியவர்களும், அவரைவிட மலிவாக எழுதிவரும் நண்பர்கள் விடயத்தில் இதே நடவடிக்கைகளை எடுத்தீர்களானால் உங்களின் நடுநிலமை பேசப்பட்டிருக்கும்.
எனவே மற்றவர்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில் நண்பர் விடாது கருப்பு அவர்களுக்கு ஒர் எச்சரிக்கை விடுத்து அவரது பதிவுகளை தமிழ்மணம் மீண்டும் திரட்ட ஆவண செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
அன்பன்
பங்காளி
By பங்காளி on Dec 6, 2006
Sathish aka KaruppuPaiyan was wantonly posting such posts.His blog contains only such posts. He was targetting one caste and some bloggers.
That was pure hate speech, no hold barred.Some bloggers were
supporting him and were encouraging him although they knew that he was indulging in
hate speech only. So your decision is justified and is a right one.You have given him
enough time and opportunities to correct himself.Yet he was repeating the same hate speech with more vengence. The decision by Tamizmanam though belated is an appropriate decision.The timing was apt.
I hope that some others who write in similar lanuage and style will take note of your decision and correct themselves.
By blogger on Dec 6, 2006
its really unfortunate.
i havent expected such things, explicitly showing partiality by thamizmanam. All the reasons stated for removal are equally applicable to others too, i feel. For the past two years I have been reading all blogs and understand the happenings. Now it shows your color.
I strongly condemn this.
By mathu on Dec 6, 2006
தமிழ்மணம் ஒரு தனி மரம்.
நாம் அதில் தங்கும் பறவைகள்.
நமக்கு இதிலெல்லாம் கருத்து தெரிவிக்க உரிமை இல்லையோ என எண்ணுகிறேன்.
நடந்தது ஒரு வருந்தத் தக்க சம்பவம்.
மற்றவர்கள் இதைப் பார்த்து தங்கள் நடையினை இனியாவது மாற்றி தமிழ்மணத்திற்குள் வருவதை ஒரு இனிய அனுபவமாகச் செய்வார்கள் என நினைக்கிறேன்.
இந்த வேண்டுகோள் அனைவருக்குமே!
வேகம் தணிந்த விடாது கருப்புவின் விவேகமான பதிவுகளை மீண்டும் தமிழ்மணத்தில் எதிர்பார்க்கிறேன்.
அவனை நிறுத்தச் சொல்; நான் நிறுத்துகிறேன் என்பதை விடுத்து, மாற்றம் தன்னளவில் கொண்டு வந்து, “தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு ஒரு இக்கட்டான நிலையினை கொடுக்காமல் இருக்க” அனைவரும் பாடுபட வேண்டும்.
தவறாக ஏதும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.
By SK on Dec 6, 2006
//தமிழ்மணம் ஒரு தனி மரம்.
நாம் அதில் தங்கும் பறவைகள்.
நமக்கு இதிலெல்லாம் கருத்து தெரிவிக்க உரிமை இல்லையோ என எண்ணுகிறேன்.
வேகம் தணிந்த விடாது கருப்புவின் பதிவுகளை மீண்டும் தமிழ்மணத்தில் எதிர்பார்க்கிறேன்.//
இது நன்று …! எஸ்கே ஐயாவை நானும் வழிமொழிகிறேன்
By கோவி.கண்ணன் on Dec 6, 2006
சற்றே காலம் தாழ்ந்தாலும் மிக சரியானதொரு முடிவு.
நன்றி தமிழ்மணம்.
மேற்படி விடாது கருப்புவை பதிவு & பின்னூட்டங்களையும் என்னுடைய பதிவையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பவர்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களைப் பற்றிய விபரங்களை விடாது கருப்புவிற்கு அனுப்பி வைக்கவும். அவர்களைப் பற்றி அந்த நபர் கீழ்த்தரமாக எழுதிய பிறகு இதே கருத்தோடு வந்தால் வரவேற்கிறேன்.
எந்த ஒரு நிலையிலும் யாரையும் தரம் குறைவாக நான் தாக்கி எழுதியது கிடையாது என்பது தமிழ் வலையுலகைச் சேர்ந்த அனைத்து நடுநிலையாளர்களுக்கும் தெரியும்.
மிக்க நன்றி தமிழ்மணம்.
வஜ்ரா அவர்கள் கேட்டபடி, மேற்படி நபர் (வழக்கம் போல) வேறொரு பெயரில் இங்கே வந்தால் அதை தடுப்பது எப்படி என்பதை அறியத் தருவீர்களா?! அதற்கு தொழில் நுட்ப மூலம் எதுவும் தீர்வு உண்டா என்பதையும் யோசிக்க வேண்டும். சிரமமான காரியம் தான். என்றாலும் விபரம் அறிந்தவர்கள் இதற்கு யோசனை தெரிவிக்க வேண்டும்.
By மாயவரத்தான்... on Dec 6, 2006
தனி நபர்கள் மீதான அவதூறுகள், மிரட்டல்கள், ஆபாசத் தாக்குதல்கள் இவை மட்டுமே கணக்கிலெடுக்கப்படுகின்றன. இப்பட்டப்பட்ட பதிவுகளைச் சுட்டிக்காட்டினால் தமிழ்மணம் பரிசீலிக்கும். அந்த அடிப்படையில் ஹரிஹரனின் சில இடுகைகள், ஓகையின் ஓர் இடுகையின் பின்னான தனிப்பட்டவர்கள்மீதானதும் தமிழ்மணம் மீதானதுமான ஆதாரமற்ற அநாமதேயத்தாக்குதல்களின் அனுமதிப்பு, மதம் சம்பந்தமாக எல்லைமீறிய வசைப்பதிவுகள் உட்பட ஏற்கனவே வந்த சில முறையீடுகள் பரிசீலனையில் உள்ளன. அவை குறித்து விரைவில் தமிழ்மணம் முடிவெடுக்கும். தமிழ்மணத்தின் முடிவுகளுக்கு கருத்தியல் அடிப்படையாக இருக்காது. ஆகவே கருத்து வேறுபாடுகளை மட்டுமே அடிப்படையாக வைத்து புகார்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டுகிறோம். செர்வாண்டிசின் பின்னூட்டங்களிலே இருந்த தமிழ்மணம் தொடர்பான ஆதாரமற்ற அநாமதேயத்தாக்குதல்களை அவர் அனுமதிப்பது குறித்து அவ்விடுகை விலக்கப்பட்டது. அவருக்குச் சுட்டிக் காட்டியபின்னால், அவரால் அப்பின்னூட்டங்கள் விலக்கப்பட்டன. அதனைத் தமிழ்மணம் வரவேற்கிறது. ஆதாரங்களுடன் தன் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளைத் தமிழ்மணம் மறுக்காது. இயலுமானவரையிலே பதில் அளிக்கும். ஆனால், எப்புறத்திலிருந்தும் எக்கருத்தியலிருந்தும் ஆதாரமற்ற மறைமுகமான தமிழ்மணம் மீதான தாக்குதல்களையோ வேண்டுகோள் என்ற பாவனையிலான மென்மையான பயமுறுத்தல்களையோ தமிழ்மணம் கருத்துச்சுதந்திரம் என்ற பெயரிலே, தன்னைச் சுட்டுக்கொண்டு இனியும் ஆதரிக்க முடியாத நிலையிலேயிருக்கின்றது. விடாது கறுப்பின் பதிவு தொடர்பாக தமிழ்மணம் ஆலோசனை செய்யும்.
மேலும் இப்பதிவினைத் தனிப்பட்ட சச்சரவுகளுக்கான களமாகப் பயன்படுத்துவதைத் தமிழ்மணம் அனுமதிக்காது.
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்புக்கு நன்றி.
By தமிழ்மணம் on Dec 6, 2006
விடாது கருப்புவின் பதிவிலேயே என்னைப் பற்றியும் மேலும் பல சக பதிவர்களைப் பற்றியும் தரக்குறைவாக பின்னூட்டம் இருப்பது மேற்படி பின்னூட்டக்காரருக்கு தெரியவில்லையா.. அல்லது அந்த வார்த்தைகள் எல்லாம் இவரது அகராதியில் கெட்ட வார்த்தைகள் இல்லையோ?!
By மாயவரத்தான்... on Dec 6, 2006
/விடாது கறுப்பின் பதிவு தொடர்பாக தமிழ்மணம் ஆலோசனை செய்யும்//
சம்பந்தப்பட்ட கேவலமான பதிவுகளையும், பின்னூட்டங்களையும் நீக்கினால் தானே?!
====
பதிவர் மாயவரத்தான்:
இங்கே உங்களது கேள்வி அநாவசியமானதென்றே தோன்றுகிறது. விடாது கறுப்பின் பதிவினை நீக்கியது இங்கே அச்செயற்பாட்டினை எதிர்ப்பவர்களுக்கு ஒரு தோல்வியாகவோ அல்லது அதனை ஆதரிப்பவர்களுக்கு ஒரு வெற்றியாகவோ எந்நிலையிலும் கருதப்படக்கூடாதென்பதினை உறுதியாகத் தெரிவிக்க, தமிழ்மணம் விரும்புகிறது. பதிவு அரசியல் தமிழ்மணத்தின் நோக்காக என்றும் இருந்ததில்லை; இருக்கவும் போவதில்லை. தமிழ்மணம் பதிவர்களினதும் வாசகர்களினதும் வசதிக்காக, தரமான பதிவுகளை ஒருங்குபடுத்தும் ஒரு திரட்டி மட்டுமே. தமிழ்மணத்தின் சேவையின் தரமும் அதன் இயல்பான செயற்பாடுகளுக்கு இடரேதும் இல்லாதிருப்பதே தமிழ்மணத்தின் செயற்பாடுகளின் நோக்குகளாகும். அதற்கப்பால், அதற்கேதும் பக்கம்சாய் அரசியல் இல்லை. அவ்வகையிலே விடாது கறுப்பின் பதிவினை எக்காரணத்துக்காக நீக்கியதோ அக்காரணத்துக்கான நிவர்த்தி அவர் பதிவிலே தென்பட்டால் அப்பதிவினை நீக்கிய தமிழ்மணமே அதை ஏன் சேர்க்கிறது என்று தகுந்த காரணத்தினைத் தன் விதிமுறைகளூடாகக் காட்டியபின் சேர்த்துக்கொள்ளும். அப்போது வேண்டுமானால், இப்படியான கேள்விகளைக் கேட்பது ஏதேனும் விதத்திலே பயனுள்ளதாகவிருக்கலாம்.
நன்றி.
தமிழ்மணம் நிர்வாகம்
By மாயவரத்தான்... on Dec 6, 2006
இப்பதிவிற்கு பின்னூட்ட அனுமதியே இருந்திருக்கக் கூடாது என்பது என் கருத்து.
என்னுடையதையும் சேர்த்தே சொல்கிறேன்!!
By SK on Dec 6, 2006
சரியான முடிவு. வெகு காலமாக தரம் தாழ்ந்த பதிவுகளையே எழுதிவந்தார். இங்க விடாதுகருப்புக்கு ஏன் ஜல்லி அடிக்கும் படுகிறது என்று நன்கு சிந்திப்பவர்களுக்கு தெரியும். பகுத்தறிவு பகுத்து அறிவதற்கே
By ராஜா on Dec 6, 2006
//ஹரிஹரன்களை விட கருப்புவின் செயல்களில் குற்றம் காண்பது எவ்வகையில் நியாயம் என்று புரியவில்லை. அவரை பகிரங்கமாக குற்றம் சாட்டிய மாயவரத்தான்களை பற்றி கணக்கில் எடுத்தீர்களா என்றும் புரியவில்லை. அதன் பிந்தான் தோழர் கருப்புவின் தொனி மாறியதை அறிவோம்.
அனைத்து விதிகளும், சட்டங்களும் அதிகாரங்களால் மட்டுமே கட்டபட்டவை என்று தெரிந்தபோதும் முடிவை பரிசிலிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“வரவனையான்” செந்தில்//
இதையே நானும் மறுமொழிகிறேன்.
மாசிலா.
By மாசிலா on Dec 6, 2006
நடுநிலை தவறாது செயல்பட்ட தமிழ்மண நிர்வாகத்துக்கு நன்றி.பதிவர்களின் குடும்ப உறுப்பினர்களை பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் தாக்கியதை எவ்விதத்திலும் ஜீரணிக்க முடியவில்லை.சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து தமிழ்பதிவுலகில் ஒரு ஆரோக்கியமான சூழல் நிலவ வழிவகுத்து விட்டீர்கள்.
அனைவரும் ஏற்கும் தீர்ப்பை எந்த நீதிபதியும் தர இயலாது.அப்படித்தரும் தீர்ப்பு காம்ப்ரமைஸ் தீர்ப்பாகும், நீதிதவறாத தீர்ப்பு சிலருக்கு ஜீரணிக்க முடியாததாகத்தான் இருக்கும்.
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
போலி டோண்டுவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட
பெயர் சொல்ல முடியாத ஒரு பதிவர்
By ஒரு பதிவர் on Dec 6, 2006
இது ஒருதலை பட்சமான முடிவு.உண்மையாகவே நீங்கள் புரிந்துணர்வுடன்தான் ஒத்துழைப்பு தருகிறீர்களா என்று சந்தேகமாக இருக்கிறது.ஆம் என்றால் தமிழ்மணத்தின் புரிந்துணர்வில் கோளாறு இருப்பதாகவே கருதவேண்டியிருக்கும்.இது கருத்து ஊடகம்.இதில் இருபக்க நியாயங்களை அனுமதிப்பதே ஒருங்கிணைப்பவரின் கடமை.உண்மையில் நீக்க வேண்டிய பதிவுகள் எவையெவை என்பதை ஒரு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்வதுதான் நியாயம்.தயவுசெய்து உங்கள் முடிவை பரிசீலியுங்கள்.
By ஆழியூரான் on Dec 6, 2006
மிக சரியான முடிவு.
மிக்க நன்றி தமிழ்மணம்
By Vikram on Dec 6, 2006
நீக்க வேண்டிய பதிவுகள் எவையெவை என்பதை ஒரு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்வதுதான் நியாயம். உங்கள் முடிவை பரிசீலியுங்கள்
By gulf-tamilan on Dec 6, 2006
தமிழ் வலைப்பதிவுலகின் நெஞ்சிலிருந்த முள் நீக்கப் பட்டுவிட்டது.
By உண்மையான திராவிடன் on Dec 6, 2006
//
உண்மையில் நீக்க வேண்டிய பதிவுகள் எவையெவை என்பதை ஒரு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்வதுதான் நியாயம்.தயவுசெய்து உங்கள் முடிவை பரிசீலியுங்கள்.
//
இதுலயும் “கள்ள ஓட்டு” போட்டு உங்க கொளுகைக்கு வெறோதமா இருக்குற பதிவர்களை விரட்டவா ?
தமிழ்மணம் இந்த விஷயத்தை அறிவித்துவிட்டு இந்த பதிவுக்கு பின்னூட்ட வசதியை நீக்கிவைத்திருக்கலாம் என்பது என் தாழ்மையான கருத்து.
===
பதிவர் dravidian@asshole.com:
செய்திருக்கலாம்தான். ஆனால், தமிழ்மணத்தின் முடிவு குறித்த கருத்துகள் பகிரங்கமாகப் பேச வசதி செய்து தராவிட்டால், அதுவும் தமிழ்மணம் பதில் கூறமுடியாத இடங்களிலெல்லாம் கருத்துச்சுதந்திரம் தரவில்லை என்ற அர்த்தத்திலே தமிழ்மணத்தினைத் தாக்குவதற்குப் பயன்படக்கூடும். அப்படியான நிலையை ஏற்படுத்தத் தமிழ்மணம் விரும்பவில்லை. உதாரணத்துக்கு உங்கள் முகவரியைக் காரணம் காட்டி முதலிரண்டு தடவைகள் உங்கள் பதிவினை அனுமதித்திருக்காவிட்டால், யாராவது கருத்துச்சுதந்திரம் என்ற பெயரிலே வேறெங்காவது தமிழ்மணம் பற்றிக் கருத்தினைத் தெரிவிக்கும் நிலை ஏற்படும். ஆனால், இங்கேயே அதைச் சுட்டிக்காட்ட வசதி ஏற்படுத்தித் தந்தால், அப்படியான நிலை ஏற்படாதெனத் தோன்றுகிறது.
தமிழ்மணம் நிர்வாகம்
By உண்மையான திராவிடன் on Dec 6, 2006
oru pothu idathil yellorume nagaregamagathan natan thu kolkirom.patithavarkal pangerkum athu um sinthika athai yelithil kontu varakutiya,valimaiyana penavai vaitiruppavar kal,yaraka irunthalum,avarkal karuthukalai sabai kuriya mariyathaiyudan than solla ventum.nam onrum katumirantigal allave.parasparam kanniyam illathavarkal yeluthave varaventiyathilai.
By kala on Dec 6, 2006
இதில் வடுவூர் குமார், குமரன் போன்றோர் விடாதுகருப்புவின் எதிர்த்தரப்பாக எப்படி வந்தார்கள் என்பது விளங்கவில்லை.
அப்படியாயின் யாரை எதிர்ப்பதென்பதில் விடாது கருப்புக்கு எந்த விளக்கமோ கொள்கையோ இல்லையென்பதாகவே நான் விளங்கிக்கொள்கிறேன்.
சகட்டுமேனிக்கு தன் எதிரிகளைத் தானே வரித்துக்கொண்டு வசைபாடுவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறாரோ?
குறிப்பிட்ட பதிவு சம்பந்தமான அதிருப்தியை தமிழ்மண நிர்வாகம் தெரிவித்தபோது ‘உங்கள் மிரட்டல்களுக்கெல்லாம் அடிபணியப்போவதில்லை’ என்று முன்பொருமுறை நிர்வாகத்துக்கு எதிராக விடாது கருப்பு எழுதியபோது, பிரச்சினை தொடர்பாகவோ தமிழ்ப்புரிதல் தொடர்பாகவோ கருப்புக்கு அடிப்படைப் புரிதலில்லை என்றே கருதிக்கொண்டேன்.
இந்தப் புரிதலற்ற தன்மை இன்னும் பலருக்கு இருப்பதாகவே தெரிகிறது.
By கொழுவி on Dec 6, 2006
//இதில் வடுவூர் குமார், குமரன் போன்றோர் விடாதுகருப்புவின் எதிர்த்தரப்பாக எப்படி வந்தார்கள் என்பது விளங்கவில்லை.
//
நன்றி திரு.கொழுவி.
By குமரன் (Kumaran) on Dec 6, 2006
//ஒரு வழக்கு என்று வந்தால் நன்கு தீர விசாரித்து பதிவுகளை அகற்ற வேண்டும். ஆனால் எனக்கு நீங்கள் எந்த கடிதமும் இடவில்லை. எந்த விளக்கமும் கேட்கவில்லை. அப்படி இருக்கும்போது நீங்கள் என் பதிவினை நீக்கியது கண்டனத்துக்கு உரியது.
//
[பதிவர் குமரனின் பதில் நீக்கப்பட்டது]
பதிவர் குமரன்:
மன்னித்துக்கொள்ளவேண்டும். விடாது கறுப்புக்கான தனிப்பட்ட உங்கள் பதிலுக்கும் இதே அலைவரிசையிலே மற்றவர்களின் பதில்களுக்கும் ‘தமிழ்மணம் அறிவிப்புகள்’ பதிவு பொருத்தமான களமல்ல என்பதால், அனுமதிக்கவில்லை. இதைப் புரிந்துகொள்வீர்களெனத் தமிழ்மணம் நம்புகிறது.
நன்றி.
தமிழ்மணம் நிர்வாகம்.
By குமரன் (Kumaran) on Dec 6, 2006
//எந்த ஒரு நிலையிலும் யாரையும் தரம் குறைவாக நான் தாக்கி எழுதியது கிடையாது என்பது தமிழ் வலையுலகைச் சேர்ந்த அனைத்து நடுநிலையாளர்களுக்கும் தெரியும்.//
மாயவரத்தான் அவர்களே,
அப்போ ராபின்ஹூட் என்ற பதிவில் மோகமாக எழுதிய ரமேஷ் யார்?
சர்வாண்டஸ் என்ற பதிவில் மிக அசிங்கமாக எழுதிய ராகவன் யார்?
By மஞ்சமாக்கான் on Dec 6, 2006
என் பதிவை ஏன் நீங்கள் அனுமதிக்கவில்லை?
பார்ப்பன மிருகங்களை பதிவிட அனுமதிக்கும் நீங்கள் ஒரு ஏழை திராவிடரை பதிவிட அனுமதிக்காதது எங்ஙனம் தகும்?
By அனானிமஸ் on Dec 6, 2006
சங்கம் வளர்த்த மதுரையில் இருந்து எழுதுகிறேன். செளராஸ்டிரர்கள் ஒரு போதும் பார்ப்பனர் ஆக முடியாது. ஒரு செளராஸ்டிரரைப் பற்றி எழுதியதும் தமிழ்மணத்துக்கு பொத்துக் கொண்டு வந்து விட்டது. இதற்குமுன் பெரியாரைப் பற்றி மிகவும் அசிங்கமாக கீழ்த்தரமாக எழுதிய கால்கரி சிவா, வஜ்ரா சங்கர், மாயவரத்தான், ஹரிஹரன், ஜயராமன், டோண்டு பதிவுகளை வைத்து அழகு பார்க்கும் உங்களுக்கு கறுப்பு பதிவினைக் குறை சொல்ல அதிகாரமில்லை.
By ஒட்டக் கூத்தர் on Dec 6, 2006
தமிழ்மண நிர்வாகத்துக்கு,
இது மிகவும் சிக்கலான விடயம் .இதில் எல்லோரையும் திருப்தி படுத்திவிட முடியாது .ஆனாலும் அனவருக்கும் விளக்கங்கள் கொடுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள் .வலைப்பதிவுகளில் தற்போது பிரச்சனை பதிவுகளால் மட்டுமல்ல .பின்னூட்டங்களே பதிவுகளை விட மோசமாகவும் ,புத்திசாலி பதிவர்கள் சிலர் எதிர் மறை நக்கல் ,நையாண்டி (கெட்ட வார்த்தை பயன்படுத்தவில்லையாம்) மூலம் மற்றவரை உசுப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் நிலை வளர்ந்து வருகிறது .இவற்றுக்கெல்லாம் தமிழ்மணமே தீர்வு கண்டு விட முடியாது .எனவே “பதிவராய் பார்த்து திருந்தாவிட்டால் ,வலைப்பதிவை வளர்க்க முடியாது ” என்பது தான் உண்மை.
முடிந்த அளவுக்கு சில வரைமுறைகளின் அடிப்படையில் சில நடவடிக்கைகளை எடுக்க முடியும் .அதை தாங்கள் செய்வதில் சில மன வருத்தங்கள் ஏற்படலாம் .ஆனால் பொதுநலன் கருதி அதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.
விடாது கருப்பின் கருத்துக்களில் பலவற்றில் உடன்பாடு இருந்தாலும் ,அவர் எழுத்து நடை தவிர்க்கப்படவேண்டிய ஒன்று .மொழிநடையை ,நேரடித் தாக்குதல்களை அவர் குறைத்துக்கொண்டிருந்தால் அவர் கருத்து பலருக்கு சென்று சேர வாய்ப்புண்டு .அதை அவர் செய்யத்தவறியதால் அவர் பதிவு நீக்கப்பட்டிருக்கிறது .தமிழ்மணத்தின் அந்த முடிவு சரியா தவறா என்பது அதே அளவையோடு தமிழ்மணம் தொடர்ந்து எடுக்கப்போகும் நடவடிக்கைகளைப் பொறுத்தே அமையும்..எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்ய வேண்டுமென பதிவர்கள் எதிர் பார்க்க கூடாது .தமிழ்மணத்துக்கு அவகாசம் கொடுப்பது அவசியம்.
விடாது கருப்பின் பதிவை தமிழ்மணம் நீக்கியது போல ஹரிஹரன் என்பவருடைய பதிவும் நீக்கப்பட்டிருக்க வேண்டும் .சமீப காலங்களில் அவர் மிகக் கேவலமாகவும் ,உள்நோக்கத்துடனும் எழுதி வருகிறார் .அவரது பதிவை நீக்குவது பற்றி தமிழ்மணம் தான் முடிவு செய்ய வேண்டும் .ஆனால் அந்த முடிவு எடுப்பதற்கு பிற பதிவர்களின் கருத்தும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுமானால் என்னுடைய இந்த கருத்தையும் சேர்த்துக்கொள்ளவும்.
நன்றி!
By ஜோ on Dec 6, 2006
தாமதாய் வந்தாலும் மிகச்சரியான முடிவு. ஜோசப் அய்யா சொன்னது போல “ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதில் நீங்கள் எடுத்த முயற்சி வெற்றி தரும் என்று நம்புகிறேன்..”
By நாடோடி on Dec 6, 2006
தமிழ்மண நிர்வாகத்துக்கு,
ஜோவின், மேற்கண்டக் கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன் !
நன்றி
By கோவி.கண்ணன் on Dec 6, 2006
ஹரிஹரன் எந்த பதிவரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதவில்லை. பெரியாரை கிண்டல் செய்து எழுதினார். ஆனால் பெரியார் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட கடவுள் அல்லவே?மனிதர்களை காயப்படுத்துவதை தவிர்க்க வேண்டுமே அன்றி மனிதர்களின் நம்பிக்கைகளையும் அவர்கள் புனிதமாக கருதுவதையும் தாக்குதை தவிர்க்க வேண்டும் என்பதை ஏற்க இயலாது.
ஜோவுக்கு தரும் மரியாதையை நான் கிறிஸ்தவத்துக்கு தர முடியாது. டோண்டுவுக்கு ஜோ தரும் மரியாதையை டோண்டுவின் ஜாதியத்துக்கு அவர் தரவேண்டும் என்பதை எதிர்பார்க்க இயலாது.
மதிப்பிற்குறியவர்கள் தனிமனிதர்கள் தானே அன்றி அவர்களின் நம்பிக்கைகள் அல்ல. பொதுவாழ்வுக்கு வந்த மனிதர்கள் விமர்சனத்துக்கு ஆளாவதை தவிர்க்க இயலாது.பெரியாரை பற்றிய விமர்சனத்துக்கு (மட்டும்) வரம்பு வைக்கும் அவரது பக்தர்கள் செயலை அவரே ஆதரிக்க மாட்டார்.
By ஒரு பதிவர் on Dec 6, 2006
தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
விடாது கருப்பு பதிவி கண்டிப்பாக நீக்க பட வேண்டிய ஒன்று தான். வக்கிர கருத்துகளை கண்ணியமான எழுத்துகளில் எழுதினாலும் வக்கிரம் வக்கிரம் தான்.
குமரன் , குமார் போன்ற தனி பட்ட பதிவாளர்களை வாய் கூசும் வார்த்தைகளை வைத்து தாக்கியது மன்னிக்க பட வேண்டியது அல்ல.
மேலும் பின்னோட்டங்களில் தனக்கு தானே இவர் குடும்பம் தோல் வியாபாரம் செய்கிறது. இவர் என்ன செய்கிறார் என்று ஆபாச வார்த்தைகளை போட்டு தாக்கியது கண்ணியம் இல்லாத செயல்.
தமிழ் மணம் இது போல களை எடுப்பு செய்வது நீண்ட கால தமிழ் வலை பூக்களின் வளர்சிக்கு வழி வகுக்கும்.
நாங்கள் இலவசமாக உங்கள் சேவையை பயன் படுத்துகிறோம். உங்களை குற்றம் சொல்ல எனக்கு அருகதை இல்லை என நினைக்கிறேன். தனி பட்ட அலுவல்கள பல இருப்பினும் அனைவரின் கருத்து அறியு நினைக்கும் உங்கள் பண்பான செயல் போற்ற தக்கது
By பெயர் சொல்ல விரும்பாதவர் on Dec 6, 2006
Good decision. Vidathu karuppu’s language crossed all the limits.
By Suresh on Dec 6, 2006
திரு.ஜோ வின் கருத்து ஏற்புடையதே!! நானும் உடன்படுகிறேன்.
நன்றி
By Sivabalan V on Dec 6, 2006
புரிந்து கொள்கிறேன் தமிழ்மணத்தாரே.
By குமரன் (Kumaran) on Dec 6, 2006
ஒரு பதிவர்,
ஹரிஹரன் நம்பிக்கைகளை மட்டுமே தாக்குகிறார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை .அவர் மோசமான வார்த்தைகள் பயன்படுத்தவில்லையே ,யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லையே என்று சொல்லி தப்பிக்க நினைப்பது சட்டத்தின் ஓட்டைகளை சாமார்த்தியமாக பயன்படுத்தி தப்பித்துக் கொள்ள நினைப்பவரின் வக்கீல் செய்யும் வாதம் .நேரடித் தாக்குதலுக்கும் ,புத்திசாலித் தனமான மறைமுக ,நையாண்டி ,வஞ்சப்புகழ்ச்சி எழுத்து மூலம் தூண்டி விடுவதற்கும் சட்டப்படி வேறுபாடு இருக்கலாம் .ஆனால் இரண்டின் உள்ளடக்கமும் ,அது ஏற்படுத்தும் விளைவுகளும் ஒன்று தான் .அதனால் எனக்கு வேறுபாடு தெரியவில்லை.
By ஜோ on Dec 6, 2006
கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவது கொடுமைதான்.
ஆனால்,
‘விடாது கறுப்பு’ சமீப காலமாக, அவர் பதிவுகளில்,தகாத வார்த்தைகள் உபயோகிப்பதும், சரியான மட்டுறுத்தல் செய்யாமல் பின்னூட்டங்கள் அனுமதித்தும் வாடிக்கையாக செய்து கொண்டிருந்தார்.
யார் சொல்லியும் கேட்கவில்லை.
‘சூடு’ குறைந்து, நல்ல கருத்துக்களை ‘அசிங்கம்’ இல்லாமல் பதிய விருப்பப்பட்டு மீண்டும் புதிய பதிவுடன் வந்தால் அவருக்கு அனுமதி தர வேண்டும் என்பதே என் கருத்து.
அடுத்தவரை நாகரீகம் இல்லாமல் தாக்குவது சரியல்ல. இதை செய்யும் மற்ற பதிவர்களும், அவர்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
புரிதலுக்கு நன்றி!
அநாகரீக பதிவாளர்களை உடனுக்குடன் தமிழ்மணத்துக்கு தெரியப் படுத்துங்கள்.
தமிழ்மண நிர்வாகிகளும், உடனக்குடன் ‘எச்சரிக்கை’ அனுப்பி, முடிந்தவரை பதிவர்களை ‘திருத்தப்’ பார்க்க வேண்டும்.
நமக்குள்ள அடிச்சுக்கவே நேரம் சரியா இருக்க. என்னிக்கு ஊரு திருந்தரது ?
(suggestion: Thamizmanam can colour code ‘problem’ blogs when listing the blogs during the ‘evaluation’ period in addition to sending an email to the blogger. This will give an indication for the readers and the blogger to take appropriate steps).
By BadNewsIndia on Dec 6, 2006
கருத்து சொல்ல எல்லாருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் ஒருவர் கருத்தை கருத்தால் எதிர்க்க திரணியில்லாமல், ஒரு அகராதி தமிழ் கெட்டவார்த்தைகளின் அகராதியாக உருவெடுத்து கீழ்த்தரமான வாத்தைகளில் எழுதினால் அதன் பயனை அனுபவித்துதானே வேண்டும்!
தமிழ்மணம் தன் கடைமையை செய்திருக்கிறது - என் வாழ்த்துக்கள்.
அடுத்து சட்டம் தன் கடைமையை செய்யும் என நம்புகிறேன். அடுத்தவன் அம்மா, சகோதரி பற்றி அவலமாக இமெயில் அனுப்புவதும், இமெயில் ஃபோர்ஜரி செய்வதும், கொலை மற்றும் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுவதற்கும் பலன் விரைவில் கிட்டட்டும்.
By கபாம்குபீம் on Dec 6, 2006
திரு. ஜோ அவர்களின் மேற்கண்ட கருத்துக்களில் நான் உடன்படுகிறேன்.
By மரைக்காயர் on Dec 6, 2006
//ஓகையின் ஓர் இடுகையின் பின்னான தனிப்பட்டவர்கள்மீதானதும் தமிழ்மணம் மீதானதுமான ஆதாரமற்ற அநாமதேயத்தாக்குதல்களின் அனுமதிப்பு, மதம் சம்பந்தமாக எல்லைமீறிய வசைப்பதிவுகள் உட்பட ஏற்கனவே வந்த சில முறையீடுகள் பரிசீலனையில் உள்ளன//
இது குறித்து என்னிடம் யாரும் நேரிலோ தனி மடலிலோ கேட்கவில்லை. அப்பதிவின் பின்னூட்டங்களுக்கு முடிந்தவரை அங்கேயே பதில் அளித்திருக்கிறேன். எனக்கு ஏதும் தவறாகத் தெரியவில்லை.
ஆனால் இது குறித்து தமிழ்மனத்திற்கு புகார் வந்திருக்கிறது என்று இப்போது அறிந்து கொண்டதனால் அந்த பதிவின் அனைத்து பின்னூட்டங்களையும் நீக்கிவிடுகிறேன்.
கருத்தளவில் இல்லாமல் மனத்தளவில் வருத்தம் இருக்குமானால் தொடர்புடைய அனைவரும் என்னை மன்னிப்பார்களாக.
தமிழ்மனம் தொடர்பான ஒன்று இந்த அளவு திறந்த விவாதத்துடன் நடப்பது மிகவும் பாராட்டுக்குறியது. தமிழ்மனத்துக்கு நன்றி.
எல்லா பதிவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். கருத்து எவ்வளவு கடுமையாயினும் நல்ல மொழியிலேயே அதைச் செய்யுங்கள். எவ்வளவு அருமையான உணவாக இருந்தாலும் அழுக்குத் தட்டில் அதை பரிமாற வேண்டாம்.
நன்றி.
By (ஓகை) நடராஜன் on Dec 6, 2006
திரு ஜோ அவர்களின் கருத்துக்கள் தெளிவாக உள்ளன. அதையே நானும் வழிமொழிகிறேன்..
By பொன்ஸ் on Dec 6, 2006
ஒரு பதிவர் என்ற நண்பரின் கருத்தில் நான் உடன்படுகிறேன் , ஹரிஹரன் யார் குடும்பத்தை பற்றி அசிங்கமாக எழுதினார் ? பார்ப்பன நாய்களே என்று தலைப்பிலேயே எழுதுகிறார்களே ? அதற்குண்டான நியாயம் பெரியார் பற்றிய பதிவுக்கு இல்லையா என்ன ? தங்கள் தரப்பிலிருந்து ஒரு ஆள் தண்டிக்கப்பட்டவுடன் எதிர்தரப்பிலும் ஒரு ஆள் விழவேணுமெண்று ஆசைப்படுகிறார்கள் .
பரதரசு
By பரதரசு on Dec 7, 2006
தமிழ்மணம் இப்போது தனது எதிரிகள் யார் என்று உணர்ந்துகொள்ள வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
By திராவிடவெறியன் on Dec 7, 2006
ஜோ
நம்பிக்கைகள் தாக்கப்பட்டக் கூடாது என்றால் அப்போது பார்ப்பனியம் கூட நம்பிக்கை தான். அது மட்டும் தாக்குதலுகுட்படலாமா?அதை தாக்கிய பெரியார் தவறு செய்தவராகவில்லையா?ராமர் சிலையை செருப்பால் அடித்த அவரது செயல் ஹரிஹரனை விட எந்த விதத்தில் வேறுபட்டது?
பெரியார் மனிதர்களை மதித்தார்.ஆனால் அதே சமயம் அவர்களின் நம்பிக்கைகளை அடித்து உடைக்கவும் தவறவில்லை.
இதில் சட்டத்தின் ஓட்டை, கீட்டை என எதுவும் இல்லை. பெரியாருக்கு அவரது எதிர்ப்பாளர்களிடம் கிடைத்த கருத்து சுதந்திரம் அவரது சீடகோடிகளால் அவர்களது எதிர்ப்பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறதா என்பது தான் முக்கியம்.
மீண்டும் சொல்கிறேன். தனிமனிதர்கள் மதிக்கப்பட வேண்டும். அதே சமயம் அவர்களது நம்பிக்கைகள் மதிக்கபட வேண்டியவையோ, மரியாதை தரப்பட வேண்டியவையோ அல்ல.
அப்படி நம்பிக்கைகளுக்கு மரியாதை தரவேண்டுமென்றால் அதை பிராமணீயத்துக்கு தரத்தவறிய பெரியார் தான் முதல் குற்றவாளி ஆகிறார்.
By ஒரு பதிவர் on Dec 7, 2006
//நேரடித் தாக்குதலுக்கும் ,புத்திசாலித் தனமான மறைமுக ,நையாண்டி ,வஞ்சப்புகழ்ச்சி எழுத்து மூலம் தூண்டி விடுவதற்கும் சட்டப்படி வேறுபாடு இருக்கலாம் .ஆனால் இரண்டின் உள்ளடக்கமும் ,அது ஏற்படுத்தும் விளைவுகளும் ஒன்று தான் ./
தனிமனிதர்களை தாக்குவதற்கும் அவர்களின் நம்பிக்கைகளை தாக்குவதற்கும் உள்ள வித்யாசத்தை நீங்கள் நேரடி தாக்குதலுக்கும், மறைமுக தாக்குதலுக்கும் உள்ள வித்யாசமாக எப்படி புரிந்து கொள்கிறீர்கள் என தெரியவில்லை.
“சுந்தர சுப்ரமணியன் என்ற முட்டாள் பதிவர்” என்பது தனிப்பட்ட தாக்குதல்
“அழகிய முருகன் (சுந்தர சுப்ரமணியத்தின் மொழிபெயர்ப்பு) என்ற முட்டாள் பதிவர்” என்பது நீங்கள் சொன்ன மறைமுக, வஞ்சகப்புகழ்ச்சி அணி.
ஆனால் சுந்தர சுப்ரமணியம் பின்பற்றும் எதாவது ஒரு நம்பிக்கையை தாக்குவதும் மேல்கண்ட இரண்டும் முற்றிலும் வேறு வேறானவை.
ஒரு மனிதனின் நம்பிக்கையை எத்தனை இழிவுபடுத்தினாலும் அது அந்த மனிதனை இழுவுபடுத்துவதாகாது. அப்படி அந்த மனிதன் நினைத்துக் கொண்டால் அது விமர்சனத்தை தாங்க இயலாத அவனது பக்குவமின்மையை குறிக்குமே அன்றி வேறெதையும் குறிப்பதாகாது. ஜெயலலிதா மீது எனக்கு நம்பிக்கை இருப்பதால் அவரை தாக்க கூடாது என நான் சொல்ல முடியுமா?
By ஒரு பதிவர் on Dec 7, 2006
In a lighter vein ஹரிஹரனின் பதிவை படிக்கும் பெரியார் பக்தர்களுக்கு உடனடி தேவை அண்ணா சொன்ன ‘எதையும் தாங்கும் இதயம்’
By ஒரு பதிவர் on Dec 7, 2006
தரம் தாழ்ந்த பதிவுகள் நீக்க தமிழ்மணம் எடுத்த இந்த நடவடிக்கை என்னைப் பொறுத்தவரை மிகச் சரியானதே. சுட்டிக் காட்டிய பிறகும், திருத்திக் கொள்ளாமல் தொடர்ந்தது தவறு. கண்டபடி எழுதுவதும், கருத்துச் சுதந்திரமும் ஒன்றல்ல. இது தொடக்கமாக இருக்கட்டும், இது போல், எழுதுகின்ற இன்னும் சிலருக்கும் இது பாடமாக இருக்கட்டும். களைகள் நீக்கப்பட்டு, நல்மணம் கமழும் இடமாய் தமிழ்மணம் மணக்கட்டும்!
By "சோத்துக்கட்சி"சக்தி on Dec 7, 2006
நாகரீகமான மொழியில் அநாகரீகத்தை பரப்பலாம். ஆனால் அநாகரீகமான மொழியில் நாகரீகத்தை பரப்பினால் அது குற்றம்.இவ்வாறு கருதும் தமிழ்மணத்தில் உடனடியாக சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
By jaallyjumper on Dec 7, 2006
நண்பர் JOE வின் கருத்துக்களுக்கு நானும் உடன்படுகிறேன். வில்லை விட்டு அம்பை நோவானேன்.
பேசாமல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் வகையாக ஒரு பதிவு எந்த வகையில் ஒருவரைப் பாதிக்கிறது என்பதை… உதாரணமாக.. அசிங்கமான வார்த்தைகள் பயன்படுத்தியிருப்பது.. மதரீதியான மோதல்களுக்கு வழிவகுப்பது.. கலாச்சாரச் சீர்கேடு.. ஆபாசக்கருத்துக்கள் போன்ற செக்பாக்ஸ் வைத்து குறைகளைக் கேட்பதற்கு வழி செய்யுங்கள். அதை எல்லோரும் பார்க்கும் படியாகவும் வையுங்கள். இது ஒரு வகையில் இந்த மாதிரியான குறைகளைக் களைய வழி வகுக்கும். இந்த மாதிரியான தொடர் குறைகளை வகைப்படுத்தி மாதமொருமுறை அந்தப் பதிவரின் பதிவை பரிசீலித்து விலக்குவதா அல்லது தொடர்வதா என்று முடிவு செய்யலாம். இதையும் வெளிப்படையாக எல்லாரும் பார்க்கும் படியாக ஒரு பக்கத்தில் தொடர்ந்து காட்டலாம்.
By திருவடியான் on Dec 7, 2006
I cannot say anything other than that supporters of black should go to mental asylum. Otherwise, they may be too young to blogsworld to know wh
By towardslight on Dec 7, 2006
I cannot say anything other than that supporters of ‘black’ should go to mental asylum. Otherwise, they may be too young to blogsworld that they do not know what is going on around. I am really very happy that something good happened to tamil cyberspace by removing the ‘black’s blog from Thamizmanam.
By towardslight on Dec 7, 2006
தமிழ்மணத்தைப் பொறுத்தவரை விடாதுகருப்புவின் சமீபகால எழுத்துக்களில் உள்ள நிதானமின்மை அவரது பதிவு நீக்கத்திற்கு நியாயமான காரணமாகவே இருக்கிறது.
ஒருவர் தன் கொள்கையை, அல்லது, தான் சார்ந்த கொள்கையை பரப்புவதற்கு எல்லா உரிமைகளும் உள்ளது. ஆனால் தனக்குப் பிடிக்காத கொள்கையை எதிர்ப்பதற்காகவே பதிவு எழுதுவதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? திரு ஹரிஹரன் அதைத்தான் செய்து வருகிறார்.
நண்பர்கள் திரு ராகவன், குமரன் போன்றோர் செய்வது போல மதம் சார்ந்த பதிவுகளை ஆக்கப்பூர்வமாக எழுதுவதே முறையானது. மாறாக தன் மதத்தை போற்றுவதற்காக அதன் மறுப்பாளரை திட்டமிட்டு எதிர்த்தும் பழித்தும் எழுதுவது நியாயமா என்பதை உங்கள் சிந்தனைக்கு வைக்கிறேன்.
நேரடியாகச் சொன்னால் பெரியாரை விமர்சிப்பதும் விவாதிப்பதும் ஆரோக்கியமானதே! ஆனால் அது திட்டமிட்ட பழிப்புகளாக செய்யப்படுவதை தமிழ்மணம் பார்த்துக் கொண்டே இருக்கப் போகிறதா?
சில இஸ்லாமிய பதிவர்களும் கூட தேவையில்லாமல் இந்து மதத்தை தாக்குவதை நிறுத்த வேண்டும். அது போலவே இஸ்லாமை தாக்கும் நண்பர்களும். அவரவர் மதங்களை போற்றுங்கள். அடுத்தவர் மதங்களை இகழாதீர்கள்.
நியாயமான சந்தேகங்களை கேட்டறியலாம். திட்டமிட்ட வெறுப்புணர்வோடு கேட்டால் பகைமையே மிஞ்சும்.
மதம் தவிர்த்து எழுதவும் வாசிக்கவும் எவ்வளவோ இருக்கிறது. (யானையின் மதம் போன்றதே மனிதனின் மதமும்).
அதே சமயம் யாரையுமே நிரந்தரமாக விலக்கி வைக்க அவசியமில்லை. தமிழ்மணத்தின் விதிமுறைகளை ஏற்று எழுத ஒப்புக்கொள்ளும் உறுதி மொழி தரும்பட்சத்தில் நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கலாம். இது விடாதுகருப்பு, ஹரிஹரன் உட்பட அனைவருக்கும் பொருந்தும்.
By சிந்தாநதி on Dec 7, 2006
பதிவர் ஓகை நடராஜன்:
இது குறித்து உங்களிடம் இதுவரை ஏதும் தமிழ்மணம் கேட்கவில்லை என்பது சரியானதுதான்.
தமிழ்மணம் குறித்து அநாமதேயமாகப் பின்னூட்டங்களிலே மொழியப்படும் பொய்ப்பரப்புரைகளை இதுவரை காலமும் பதிவர்களிடம் வினாவுவது தமிழ்மணத்திற்கு நாகரீகமில்லை என்பதால் எதையும் அவாவமல் இருந்தது; குறைந்தபட்சம் இப்படியான வேரின்றி மேலேறி விழுதுவிடும் அநாமதேயப்பின்னூட்டங்கள் வந்து விழும் பதிவுகளையிடும் பதிவர்கள் அப்படியான பின்னூட்டங்கள் குறித்து அவர்களே தார்மீகமாகத் தீர்மானம் செய்து கொள்ளவேண்டுமென்பது தமிழ்மணத்தின் எண்ணமாகவிருந்தது. தமிழ்மணத்திலே திரட்டப்படாத பதிவுகளிலே இப்படியான ஆதாரமற்ற பரப்புரைகள் ஆளறிந்த பதிவுகளாகவும் அநாமதேயப் பின்னூட்டங்களாகவும் வருவதன் காரணங்கள் அறிந்தும் அவை குறித்துத் தமிழ்மணம் எதுவுமே செய்யமுடியாத நிலையிலே தமிழ்மணத்திலே தம் பதிவுகளைத் திரட்டும் பதிவர்களும் வாசகர்களும் அதே காரணங்களை உணர்வார்களென விட்டுவிடலாம். ஆனால், தொடர்ந்து - உங்களுடையது உட்பட - தமிழ்மணத்தின் நோக்குகளிலும் இயங்கும் பாங்கிலும் நம்பிக்கை கொண்டு தம்மை அங்கே திரட்டும் சில பதிவுகளிலேயே இப்படியான தமிழ்மணத்தின் மீதான இணையச்சேறடித்தல் நிகழும்போது, அதன் பதிவர்களும் உள்ளூர அப்படியான போக்கினை ஏதேனும் வெளித்தெரியாத காரணத்துக்காக அனுமதித்து ஊக்கம் தருகின்றார்களோ என்ற ஐயம் எழுகிறது. தங்களின் பூங்கா குறித்த பதிவு வெளிப்படையாக இடப்பட்டு, உங்கள் பார்வையிலே பூங்கா எப்படியாகத் தோன்றியது என்பதையிட்ட மிகவும் கண்ணியமான வெளிப்படையான உங்களுக்குப் பட்ட ஆதாரங்களுடனான பதிவு. இதை, தமிழ்மணத்தின் இணையான பூங்காவின் சார்பிலே தமிழ்மணம் வரவேற்கிறது. ஆனால், அதன் பின்னான சில பின்னூட்டங்கள் தமிழ்மணத்தின்மீதும் பூங்கா மீதும் அநாமதேயச்சேறடிப்புக்கே வழிவகுத்தன. ஒரு முறை இரு முறை இணையத்திலே இப்படியாக ஏற்பட்டால், விட்டுவிடலாம். ஆனால், இதுவே ஒரு திட்டமிட்ட, திரும்பத் திரும்ப ஆதாரமற்ற வதந்திகளையும் காழ்ப்பான வரையறையில்லாத வசைகளையும் உள்ளடக்கிய, அநாமதேயப்பின்னூட்டங்களாக, சில பதிவுகளிலே ஒரு போக்காக வளர்வது எதேச்சையானதெனக் கருத இடமில்லையெனத் தமிழ்மணமும் தன்னிலே தொகுக்க அனுமதிக்கும் பல பதிவர்களையும் தமிழ்மணம் நலம் விரும்பும் வாசகர்களையும்போல உணரத் தொடங்கியிருக்கின்றது. இதை இப்பொழுதிலே கண்டுகொள்ளாவிட்டால், இது தமிழ்மணத்தினை மட்டுமல்ல, அதன் முக்கிய கூறுகளான இணைந்து கொண்ட பதிவர்களையும் வாசகர்களையுமே தனிப்படச் சேதப்படுத்தும் நிலையை ஏற்படுத்தும். தமிழ்மணத்திடம் விடாதுகறுப்பு பதிவினைக் குறித்து எதிர்ப்புத் தெரிவித்த பதிவர்களிலே பலரோ அல்லது அவர் பதிவினைத் திரட்டியிலிருந்து தவிர்த்தது குறித்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களிலே பல பதிவர்களோ தமிழ்மணம்மீது அநாமதேயமாகத் தாக்குதல் நடத்தியது குறித்துக் கண்டிக்காமல் அது தமிழ்மணத்தின் தன் நற்பெயருக்காகப் போராடவேண்டிய தனிப்பட்ட பிரச்சனை என்ற போக்கிலே இருப்பதாகத் தோன்றிய பொழுதிலேதான் எதிர்காலத்திலே புதிய பதிவர்களிடமும் சட்ட ரீதியிலும் இப்படியான திட்டமிட்ட எதிர்மறைத்தாக்குதல் எப்படியான நிலையை ஒரு கருத்துச்சுதந்திரம் பொதிந்த சேவையைத் தர விரும்பிய காரணத்தினால் தமிழ்மணத்துக்கு ஏற்படுத்துமென்பதை எண்ணிச் சென்ற வாரத்திலிருந்து தமிழ்மணம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஏற்படுத்த எண்ணியிருக்கின்றது. தமிழ்மணம் - தன்னைப் போன்ற இன்னொரு எந்தத்திரட்டியும் எதிர்பார்க்க விரும்புவது போலவே - தன்னிலே நம்பிக்கை கொண்டு இணைந்திருக்கும் பதிவர்களினதும் வாசகர்களினது நலனைப் பேணிச் சேவை செய்வது போலவே, மறுபக்கமிருந்தும் பதிவர்களும் தாம் கூறாயிருக்கும் தமிழ்மணத்தின் நலன் தம் பதிவுகளின் விரிவோடும் நலனோடும் சம்பந்தபட்டது என்பதை உணர்ந்து பொறுப்போடு செயற்பட வேண்டுமென விழைகிறது.
உங்களின் பதிவுகளிலே இருக்கும் மற்றைய பின்னூட்டங்கள் குறித்து தமிழ்மணம் எதையுமே கருத்தினைச் சொல்ல அருகையற்றது. தமிழ்மணம் ஒரு திரட்டி என்பதைக்கூட விட்டுவிடலாம். ஆனால், ‘தமிழ்மணம் அறிவிப்புகள்’, ‘பூங்கா’ ஆகிய இரண்டு பதிவுகள் சக பதிவுகள் என்றவளவிலேனும் அவை குறித்த அநாமதேயமான பொய்ப்பரப்புரைகளைப் பிரசுரிக்காதிருக்கும் தார்மீக நியாயம் தேவை. பதிவர் செர்வாண்டிஸ் பதிவிலே அப்படியான பின்னூட்டங்கள் வந்தபோது, அதைத் தமிழ்மணம் சுட்டிக்காட்டியதால், அவர் அகற்றியிருக்கின்றார். உங்கள் பதிவு குறித்து அவற்றிலே தனிப்பட்ட பதிவர்கள் தம் பெயர்கள் மிகவும் விகாரப்படுத்தியும் திரித்தும் பொய்மைப்படுத்தியும் குறிப்பிட்டது தொடர்பான முறையீடுகளும் தமிழ்மணத்துக்கு வந்திருப்பதால், அது தனிப்பட்ட பதிவர்களின் பிரச்சனை என்று தமிழ்மணத்தின் பிரச்சனை இல்லையென அவர்களையே கையாளும