தமிழ்மணம் பதிவர் அனுராதாவினை நினைவு கூர்கிறது
August 28, 2008 – 1:41 pm by தமிழ்மணம்புற்றுநோயுடன் போராடிக் கொண்டே கொடிய அந்நோயைப் பற்றிய விழிப்புணர்வை தன் பதிவின் மூலம் நமக்கு அளித்து வந்த பதிவர் அனுராதா தன்னுடைய துன்பத்திலிருந்து இன்று விடுதலை அடைந்தார். இன்று காலை 9.52 மணிக்கு அவர் நம்மை விட்டுப் பிரிந்து விட்டார். இருப்பினும் அவருடைய எழுத்து எப்பொழுதும் நம்முடன் இருந்து கொண்டேயிருக்கும்.
அவருடைய மறைவினால் துயருற்றிருக்கும் அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் தமிழ்மணம் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
மறைந்த பதிவர் அனுராதா போன்றவர்களின் உயிருள்ள எழுத்துக்கள்தான் வலைப்பதிவுகளின் வெற்றியையும், தமிழ்மணம் போன்ற திரட்டிகளின் தேவையையும் நமக்கு உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன.
தமிழ்மணம்
68 Responses to “தமிழ்மணம் பதிவர் அனுராதாவினை நினைவு கூர்கிறது”
நோயுடன் போராடும் தருணத்திலும் விழிப்புணர்வுக்காக அவர் எழுதிய பதிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
By Mohan on Aug 28, 2008
பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
அவருடைய குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபாங்களை இந்தத் தமிழ்மண இடுகையின் மூலம்
தெரிவித்துக் கொள்கிறேன்
SP.VR.சுப்பையா
By SP.VR.Subbiah on Aug 28, 2008
கண்ணீர் அஞ்சலி! அன்னாரின் ஆன்மா சாந்தியடைவதாக. அனுராதாவை இழந்து நிற்கும் அவர் குடும்பம் இந்த துக்கத்தை கடந்து போகும் சக்தி பெறுவதாக.
By Sridhar Narayanan on Aug 28, 2008
அவருடைய குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபாங்களை தெரிவித்துக் கொள்கிறேன்
By முரளிகண்ணன் on Aug 28, 2008
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
By பிரேம்ஜி on Aug 28, 2008
எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்!
By Sri Rangan on Aug 28, 2008
அனுராதா அம்மையாரின் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
அவரது விழிப்புணர்வு தூண்டும் பதிவுகளை தனி பக்கத்தில் தமிழ்மணம் தொகுப்பது அவரது நினைவினை தொடர்ந்து போற்றுவதாக அமையும்.
By தமிழ் சசி / Tamil SASI on Aug 28, 2008
குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
By வடகரை வேலன் on Aug 28, 2008
அவரது கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்!
By Oviya on Aug 28, 2008
ஆழ்ந்த வருத்தங்கள்.
….
/அவரது விழிப்புணர்வு தூண்டும் பதிவுகளை தனி பக்கத்தில் தமிழ்மணம் தொகுப்பது அவரது நினைவினை தொடர்ந்து போற்றுவதாக அமையும்./
அவசியமான ஒரு விடயம்.
By DJ on Aug 28, 2008
மரணம் காற்றைப் போல அண்மையில்தான் இருக்கிறதெனறாலும் யாரும் அதை உணர்வது இல்லை. கண்முன்னால் அதனைக் கண்டபின்னரும் சோர்வுற்று விடாமல் தனது பதிவுக்ளால் விழ்ப்புணர்வை ஊட்டி சமூக அக்கறையுடன் செயல்பட்ட அனுராதா அவர்களின் மறைவிற்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது குடும்பத்தினருக்கு குறிப்பாக அவரது கணவருக்கும் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நிறைந்த விழிகளோடு
By ஆசிப் மீரான் on Aug 28, 2008
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
By இலவசக்கொத்தனார் on Aug 28, 2008
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்….
By இராம்/Raam on Aug 28, 2008
அத்தனை வேதனைக்கிடையேயும், கிடைத்த சொற்ப நேரத்தினையும் பிறருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகச் செலவிட்ட அவரது உயரிய உள்ளம் வணக்கத்திற்குரியது. வலைப்பதிவுகளினூடாக நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஊடக வாய்ப்பினை நாம் எவ்விதம் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்வதும், அதற்கமைய செயலாற்றுவதுமே அனுராதா அவர்களுக்கு நாம் செய்யும் போற்றுதலாகும்.
By சுந்தரவடிவேல் on Aug 28, 2008
வருந்துகின்றோம்.
அனுவின் ஆத்மா அமைதி பெற வேண்டுகின்றோம்.
By துளசி கோபால் on Aug 28, 2008
கண்ணீர் அஞ்சலி.
By கோவை விஜய் on Aug 28, 2008
அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய ப்ரார்த்திக்கின்றோம்.
By sathanga on Aug 28, 2008
ஆழ்ந்த அனுதாபங்கள்.
By ராமலக்ஷ்மி on Aug 28, 2008
அனுராதா அவர்களின் மனஉறுதியும் சிந்தனைகளும் என்றும் நினைவில் கொள்ளத்தக்கன. அவர் பிரிவால் வாடும் கணவருக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.
By காசி on Aug 28, 2008
பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
By நல்லதந்தி on Aug 28, 2008
குடும்பத்தார்களுக்கு என்னுடைய அனுதாபங்கள்
By விருபா on Aug 28, 2008
சகோதரி அனுராதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒன்று. காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டது என்றாலும் நோயுற்றுத் துன்புற்ற நிலையிலும், மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பாராட்டிய அவரின் துணிவு வியக்க வைக்கும் ஒன்று. ஆனாலும், அவரின் நோய் பற்றி அறிந்த நட்பு வட்டமும், உறவு வட்டமும் அவரை ஒதுக்கியது என்பதை எத்தனை நாட்கள் ஆனாலும் மறக்க முடியாது. இனி வரும் நாட்களிலாவது இம்மாதிரியான ஒதுக்கலை மற்றவர்களுக்குச் செய்யாமல் இருக்கப் பழகுவோம். இது அனுராதாவின் நினைவுகளைப் போற்றும் விதமாக அமையட்டும். அவரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.
By Geetha Sambasivam on Aug 28, 2008
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
By ஜோதிபாரதி on Aug 28, 2008
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
By நிர்ஷன் on Aug 28, 2008
எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்!
By கணேஷ் on Aug 29, 2008
எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்
By Ramachandran usha on Aug 29, 2008
ஆழ்ந்த அனுதாபங்கள்.
By சுந்தரராஜன் on Aug 29, 2008
மறைந்த அனுராதா அம்மையாரின் எழுத்துக்களை தொகுத்து, சுவாரஸ்யமாக எடிட் செய்து புத்தகவடிவில் கொண்டுவருவதே அவருக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்க முடியும்.
இதற்காக சிந்தனைரீதியாகவும், உடலுழைப்பு ரீதியாகவும் உழைக்க தயாராக இருக்கிறேன். என்னோடு ஒத்த சிந்தனை கொண்டவர்கள் கரம் கோர்க்கலாம்.
By லக்கிலுக் on Aug 29, 2008
அதுமட்டுமல்ல, அவரது எழுத்துக்களை புத்தக வடிவில் கொண்டுவரும் முயற்சிக்கு தமிழ்மணம் கண்டிப்பாக துணை நிற்க வேண்டும். அனுராதாவே அவரது எழுத்துக்களை புத்தக வடிவில் கொண்டுவர விரும்பினார் என்று கேள்விப்பட்டேன். இந்தப் பணியை ஒருங்கிணைத்து செய்ய வலைப்பதிவர்களும் முன்வர வேண்டும்!!
By லக்கிலுக் on Aug 29, 2008
எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்.
அருவை பாஸ்கர்
By Aruvai baskar on Aug 29, 2008
///இதற்காக சிந்தனைரீதியாகவும், உடலுழைப்பு ரீதியாகவும் உழைக்க தயாராக இருக்கிறேன். என்னோடு ஒத்த சிந்தனை கொண்டவர்கள் கரம் கோர்க்கலாம்.////
நான் தயார் லக்கிலுக்
உடல் உழைப்பு மட்டுமின்றி என்னால் முடிந்த நிதியுதவி செய்யவும் நான் தயார்
என்னைப் போன்றே தமிழ்மணத்தோடு இணைந்து இதனைப் புத்தக வ்டிவில் கொண்டுவரத் தேவையான முயற்சிகளுக்கு துணைபுரிய முன்வரும் வலைப்பதிவர்களுக்கு இப்போதே என் வாழ்த்துகள்,
தமிழ்மணம் பதிவர்களின் இங்த வேண்டுதலைப் புரிதலோடு அங்கீகரிக்கும் என நம்புகிறேன். இல்லையென்றாலும் இதைச் செய்து முடிக்கலாமென்றே எண்ணுகிறேன்
By ஆசிப் மீரான் on Aug 29, 2008
அனுராதா அம்மையாரின் கணவர் திரு. திண்டுக்கல் சர்தார் அவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
By வெயிலான் on Aug 29, 2008
அனுராதா அவர்களின் இழப்பில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு கண்ணீர் அஞ்சலி.
அவரது எழுத்துக்கள் அவரை நம்மிடையே எப்போதும் உலாவச் செய்யும்.
By பாலாஜி-பாரி on Aug 29, 2008
//அவரது விழிப்புணர்வு தூண்டும் பதிவுகளை தனி பக்கத்தில் தமிழ்மணம் தொகுப்பது அவரது நினைவினை தொடர்ந்து போற்றுவதாக அமையும்.
By தமிழ் சசி / Tamil SASI on Aug 28, 2008//
நிச்சயம் தமிழ்மணம் இதனைச் செய்ய வேண்டும். அனுராதா அம்மாவின் எழுத்துக்கள் வலைப்பதிவுலகத்திற்கு பெருமை சேர்க்கக்கூடியது.. இதனைத் தனிப் பக்கத்தில் தமிழ்மணம் செய்து வைத்தால் நாளைய வலைப்பதிவர்களுக்குப் பெரும் உதவி செய்தது போல் இருக்கும்..
அவருடைய பதிவுகள் அனைத்துமே நல்லதொரு பாடங்கள்.. என்றென்றும் நாம் அவரை நினைவில் வைத்திருப்போம்..
அவரது ஆத்மா சாந்தியடைய அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..
By உண்மைத்தமிழன் on Aug 29, 2008
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வணங்கிநிற்கிறேன். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
By வெற்றி on Aug 29, 2008
புற்று நோய்யின் கோரத்தை,
அதையே தன் வாழ்வாக எதிர்கொண்டு,
அதை வாழ்வின் பக்குவத்துடன்,
ஒரு தீவிர முயற்சியுள்ள பெண்ணாக,
தான் எதிர்கொண்டு போராடிய வாழ்வியலை,
அதன் அனுபவத்தை,
மற்றவர்கள் அதைப் புரிந்து கொள்ளும் வண்ணம்,
சீரிய சமூக நோகத்துடன்,
எம்முன் அதை துணிவுடன் எடுத்து வந்த,
ஒரு சமூக ஜீவியின் மரணம்,
தன் மரணத்தின் ஊடாக,
பலவற்றை கற்கத் துண்டியுள்ளார்,
கற்றுக்கொடுக்கத் துண்டியுள்ளார்,
இதை புரிந்து கொண்டு,
செயல்படுவது தான்,
அவர்களுக்கான எமது அஞ்சலிகளாகும்.
By http://tamilarangam.blogspot.com/ on Aug 29, 2008
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்
By Sivabalan V on Aug 29, 2008
எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்.
By பாரதி on Aug 29, 2008
வருத்தங்களையும் அனுதாபங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்…
By King... on Aug 29, 2008
வாழ்க்கையின் கடைசி கட்டம் என்பதை அறிந்த பின் ஒரு சிலர் காட்டும் மன உறுதி பல சமயங்களில் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அவர்களில் பதிவர் அனுராதா அவர்களும் ஒருவர்.
அன்னாரின் மறைவால் வருந்தும் குடும்பத்தினருக்கு அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடைவதாக.
By கபீரன்பன் on Aug 29, 2008
என்னுடைய ஆழந்த அனுதாபங்கள் அவரது குடும்பத்துக்கும், அவரது கணவருக்கும். என் குடும்பத்திலயும் இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடந்தது போன வருடம்.அந்த நினைவுகளே இன்னும் என்னுள் ஆழமாக இருக்கும் போது இன்று மற்றுமொரு துயரம். நானும் தவறாமல் அவரது எழுத்த்க்களை படித்து வந்தேன். எல்லாம் இறைவன் செயல்.அவரது ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.
By சுமதி on Aug 29, 2008
துன்பத்திலும் அவருடைய துணிவும்
விடாமுயற்சியும் பலரும் பாராடட்டிப் பினபற்றத் தக்கன.
By தமிழநம்பி on Aug 29, 2008
எனது அஞ்சலிகளை உரித்தாக்குகிறேன்.
அன்னாரின் குடும்பத்தாருக்கு இந்த ஈடுசெய்ய முடியா இழப்பினை தாங்கிக்கொள்ளும் மனவலிமையை வழங்கிடுமாறு எல்லோருக்கும் பொதுவான இறையை வேண்டுகிறேன்.
எனக்கொரு யோசனை…
பதிவர் அனுராதாவின் பதிவினை ஒரு புத்தகமாய் தொகுத்து அவரின் நோக்கமான பெண்களிடையே விழிப்புணர்வினை பரப்பும் விதத்தில் அந்த புத்தகத்தினை அனைவருக்கும் இலவசமாய் தரலாம். இதற்காகும் செலவினை பதிவர்களான நாமே ஏற்றுக் கொள்ளலாம். இதுவே அந்த புண்ணியாத்மாவிற்கு நாம் செய்யும் நல்லஞ்சலியாக இருக்கும்.
By யட்சன் on Aug 29, 2008
பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
By arivakam on Aug 29, 2008
சிறிய துன்பங்களுக்கே நாம் துவண்டு சோர்ந்துவிடும்போது புற்றுநோயோடு போராடியதோடல்லாமல் அதைப் பற்றி மற்றவர்களுக்கு எழுதியும் அறிவுறுத்திய அவர் போற்றத்தக்கவர். இத்தனை காலமும் பொறுமையோடும் நம்பிக்கையோடும் அவர் குணம்பெறப் பாடுபட்ட குடும்பத்தினருக்கு இந்த இழப்பினை ஏற்றுக்கொள்ளும் மனவுறுதி உண்டாகட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.
By tamilnathy on Aug 29, 2008
மனம் கனக்கிறது…!
என்றாவது ஒருநாள் புற்றுநோய்க்கான
அழிப்பான் கண்டுபிடித்துவிட்டு
காத்திருக்கிறோம்.
அப்போது பிறந்துவாருங்கள்
அனுராதா அம்மா!
கண்ணீருடன்…
By சுரேகா on Aug 29, 2008
பதிவர் அனுராதாவின் தைரியத்தை வியந்து உணர்கிறேன்.குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
By ரேவதிநரசிம்ஹன் on Aug 29, 2008
By பொன்வண்டு on Aug 30, 2008
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
By Syam on Aug 30, 2008
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
By VINAIOOKI on Aug 30, 2008
இதுவரை யாரென்று அறியாத சகோதரி அனுராதாவின் மறைவு மனதை உலுக்கியது. இறந்தும் நம்மோடு இருக்கிற அவரது எண்ணங்களை எழுத்துக்களை புத்தகமாக வெளியிடுங்கள். உதவிட தயாராக இருக்கிறேன்.
By கல்யாண்குமார் on Aug 30, 2008
பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
By உருப்புடாதது_அணிமா on Aug 30, 2008
பதிவர் அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
அப்பாஸ்
By abbas on Aug 30, 2008
அனுராதா அம்மாவின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நண்பர்கள் லக்கிலுக்,ஆசிப்மீரான் போன்றோர்கள் ஆலோசனைப்படி அவரின் அனுபவங்களை புத்தகமாக வெளியிட நானும் உதவ தயாராக இருக்கிறேன்
அன்புடன்
சந்துரு
By தாமோதர் சந்துரு on Aug 30, 2008
நம்பிக்கைதான் வாழ்க்கை. என்ன ஒரு தைரியம் மரணத்தை எதிர்கொள்ளும் வேளையிலும்!! எனது அப்பாவையும் இதே புற்றுநோய்தான் பலி எடுத்தது.
அனுராதாவின் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அனுராதா அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
By ஆதிபகவன் on Aug 30, 2008
ஆழ்ந்த வருத்தங்கள்! அவர்களது ஆத்மா சாந்தி அடைவதாக!
By தங்ஸ் on Aug 31, 2008
அனுராதா அம்மையாரின் கணவருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறேன்.
By ஆ.ஞானசெகரன் on Aug 31, 2008
அனுராதா அவர்களுக்கு என் அஞ்சலிகள்!
அன்னாருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
By சுந்தரா on Aug 31, 2008
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்…
By Sathya on Aug 31, 2008
ஆழ்ந்த அனுதாபங்கள்
By நிலலின் குரல் on Aug 31, 2008
லக்கி சொன்னதுபோல் அம்மையாரின் எழுத்துக்கள் அனைத்தையும் திரட்டி, அதோடு மேலும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களின் கருத்துகளையும் பெற்று, ஒரு முழுமையான வடிவம் கொடுத்து புத்தகமாக வெளியிடலாம். அதுதான் நாம் அனுராதா அம்மையாருக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
ஆசீப் அண்ணண் போல இதற்கு ஆதரவளிப்பவர்களோடு நானும் இணைய என் சம்மதிக்கிறேன். என்னால் இயன்ற உதவியை கட்டாயம் செய்ய ஆர்வமாய் உள்ளேன்.
By Joseph Paulraj on Sep 1, 2008
சகோதரி அனுராதா சொர்க்கமடைந்த செய்தி நெஞ்சை உலுக்கிற்று.
அவரது பதிவுகளை தொகுத்து
புத்தகமாக்கி விற்பனை செய்யவேண்டும்.
கிடைக்கும் பணம் புற்றுநோயாளிகள் நலன்பெற செலவிடப்பட வேண்டுமென்ற ஆவல்.
தமிழ்மண நெட்டிசன்கள் கைகோர்த்து முயலவேண்டும்.
By srimariselvam on Sep 1, 2008
குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
புதியவனான நான் இப்போது தான் இவர்களது பதிவுகளை படித்தேன். நிஜமா நெஞ்சு பட பட னு அடிக்குது. வேதனையாகவும் இருக்கு.
அன்னாரின் ஆத்மொ சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
சுபாஷ்
By சுபாஷ் on Sep 2, 2008
சகோதரி அனுராதா மறைவுக்கு என் அஞ்சலிகள். அவரின் எழுத்துக்களை புத்தகமாக்கும் முயற்சிக்கு என்னாலான உதவியை செய்யத் தயார்.
By தஞ்சாவூரான் on Sep 2, 2008
பதிவர் அனுராதாவின் மறைவு அறிந்து வருந்துகிறேன். அவர் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
By இராம.கி on Sep 2, 2008
அனுராதா அவர்களின் இழப்பில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு கண்ணீர் அஞ்சலி.
By nalayiny on Sep 3, 2008
எனது அனுதாபங்களுடன் அஞ்சலிகள்.
By ராஜ நடராஜன் on Sep 3, 2008
அனுராதா அம்மையார் இழப்பில் வாடும் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
கொடிய நோயின் கோரப்பிடியில் சிக்கி இருந்த போதும்…….தன்னுடைய நிலை கண்டு கல்ங்காமல்…….இந்நோயால் பாதிக்கப்பட்ட சக மனிதர்க்காக வருந்திய இந்த உயர்ந்த உள்ளத்தை காலன் நம்மிடம் இருந்து பிரித்தாலும் நம் தமிழ்மணத்திலும் என்றென்றும் மணம் வீசிக்கொண்டிருக்கும்……………
By அருள் on Sep 5, 2008